நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

Mahendran
புதன், 26 மார்ச் 2025 (15:55 IST)
புதுச்சேரியை நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்தார்.
 
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், அதன் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, நகரங்களின் மக்கள்தொகை மற்றும் வருவாய் குறித்து திமுக உறுப்பினர் அனிபால் கென்னடி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார்.
 
அப்போது, புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக உருவாக்க அரசுக்கு திட்டமிருக்கிறதென அவர் தெரிவித்தார். இதற்குப் கூடுதலாக, அரியாங்குப்பம் மற்றும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துகளை நகராட்சிகளாக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தாகவே தொடரட்டும். நகராட்சியாக மாற்றினால் கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம்” என தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments