Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

Mahendran
புதன், 26 மார்ச் 2025 (15:55 IST)
புதுச்சேரியை நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்தார்.
 
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், அதன் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, நகரங்களின் மக்கள்தொகை மற்றும் வருவாய் குறித்து திமுக உறுப்பினர் அனிபால் கென்னடி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார்.
 
அப்போது, புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக உருவாக்க அரசுக்கு திட்டமிருக்கிறதென அவர் தெரிவித்தார். இதற்குப் கூடுதலாக, அரியாங்குப்பம் மற்றும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துகளை நகராட்சிகளாக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தாகவே தொடரட்டும். நகராட்சியாக மாற்றினால் கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம்” என தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான நிலையங்களை போல ரயில்வே நிலையங்களும்: பயணிகளின் உடமைகளுக்கு புதிய விதிகள் அமல்

டி.ஆர்.பாலு மனைவி மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.. இரங்கல் அறிக்கை..!

சிறுவனை கடித்து இழுத்துச் சென்ற தெரு நாய்கள்.. ஓடி வந்து மீட்ட தாய்! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்: தேஜஸ்வி யாதவ்

சென்னையில் தெருநாய்கள் அட்டகாசம்: சிறுவனை துரத்தியதால் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments