Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலை வைக்கலாம்; ஆனா ஊர்வலம் போக தடை! – புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (08:15 IST)
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், பொது இடங்களில் சிலை வைக்க முன்கூட்டியே காவல்துறையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். சிலை உள்ள இடத்தில் 25 பேருக்கும் மேல் கூட கூடாது. மேலும் சிலையை கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லக் கூடாது என்று கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments