உத்தரவை மதிக்காமல் ஊர் சுற்றும் மக்கள்: சிறை தண்டனை அறிவித்த முதல்வர்

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (14:30 IST)
ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் ஊர் சுற்றும் மக்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரி முதல்வர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஊரடங்கு உத்தரவை ஞாயிற்றுக்கிழமை முதலே முதல்வர் நாரயணசாமி அறிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மக்கள் வெளியேற வேண்டாம் என புதுச்சேரி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் புதுச்சேரி மக்களோ அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியே நடமாடியதாகவும், அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்திய போலீஸாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய முதல்வர் நாராயணசாமி அரசின் உத்தரவை மதிக்காமல் ஊர் சுற்றுபவர்களை ஒரு ஆண்டு சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “மக்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுவதாகவும், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments