Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி ரமாதேவி காலமானார்: பொதுமக்கள் இரங்கல்..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (17:38 IST)
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி ரமாதேவி இன்று காலமானதை அடுத்து அவருக்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பல சமஸ்தானங்கள் இருந்தது என்பதும் அந்த சமஸ்தானங்களை இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு சர்தார் வல்லபாய் படேல் இணைத்தார் என்பதும் தெரிந்ததே. 
 
அந்த வகையில் புதுக்கோட்டை சமஸ்தானமும் இந்தியாவில் இணைந்தது என்பதும் இருப்பினும் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரின் பரம்பரையைச் சேர்ந்த சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான். இவரது மனைவியும், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியுமான ரமாதேவி இன்று காலமானார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக இவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷட்டில் பேட்மிண்டன் விளையாடும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 25 வயது ஐடி ஊழியர் மரணம்!

நிமிஷா பிரியா விடுதலைக்காக ஏமன் பயணம் செய்யும் 13 வயது மகள்..உலுக்கும் சோகம்!

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments