Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையில் கனமழை.. பைக்கில் சென்றவரை இழுத்து சென்ற வெள்ளம்.. தேடும் பணி தீவிரம்..

Mahendran
சனி, 10 ஆகஸ்ட் 2024 (10:05 IST)
புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்பட்டதாகவும் இந்த வெள்ளத்தில் பைக்கில் சென்ற ஒருவரை காணவில்லை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் நேற்று இரவு 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது என்றும் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ள நீரில் ஒரே பைக்கில் மூன்று பேர் சென்ற நிலையில் திடீரென பைக்கை வெள்ளம் இழுத்துச் சென்றதாகவும் அதில் இரண்டு பேரை அங்கிருந்த பொதுமக்கள் காப்பாற்றிய நிலையில் ஒருவரை வெள்ளம் இழுத்துச் சென்றதாகவும் அவரை தேடும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இரண்டு மணி நேரத்தில் 15 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்த நிலையில் புதுச்சேரி எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

அடுத்த கட்டுரையில்
Show comments