Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (18:27 IST)
புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக மின்வாரிய ஊழியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
புதுச்சேரி மின் வாரியம் தனியார் வசம் ஒப்படைக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக போராட்டம் நடத்திய நிலையில் போராட்டம் நடத்திய சுமார் 500 மின்வாரிய ஊழியர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதாகவும் பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என்று புதுவை அரசு எச்சரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி உடன் மின்வாரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் தற்போது சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து புதுச்சேரி மின்வாரிய ஊழியர்கள் நடத்திவந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்றே பணிக்கு திரும்புவதாக ஊழியர்கள் முதலமைச்சரிடம் உறுதி அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்! விளக்கமளிக்க ரஷ்யா சென்ற கனிமொழி!

வாட்ஸ் அப் குழு மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சாரம்.. ரகசியங்கள் கசிவு.. உபியில் ஒருவர் கைது..!

ஒரு கல் குவாரியையே கருப்பையில் வைத்திருந்த பெண்.. 8125 கல் சர்ஜரி மூலம் அகற்றம்..!

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments