Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரியான நேரத்திற்கு அலுவலகம் வராத ஊழியர்களுக்கு விடுப்பு அளித்த ஆட்சியர்: அதிரடி நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (18:32 IST)
புதுச்சேரியில்  சரியான நேரத்தில் அலுவலகம் வராத ஊழியர்களுக்கு விடுப்பு அளித்து மாவட்ட ஆட்சியர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
புதுச்சேரியில் அரசு அலுவலங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என பல புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அதிரடியாக அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தார்
 
இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரி நகராட்சி அலுவலகத்திற்கு அவர் ஆய்வு செய்ய வந்தபோது 50 சதவீத ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து சரியான நேரத்திற்கு வராத 24 பேர்களுக்கு விடுப்பு அளித்து உத்தரவு பிறப்பித்தார். 
 
மேலும் இதே போல் தொடர்ந்து சரியான நேரத்திற்கு அலுவலர்கள் வரவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மக்கள் சேவையில் பணியாற்றும் அதிகாரிகள் உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களுக்கு இடம் மாற்றம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments