Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரியான நேரத்திற்கு அலுவலகம் வராத ஊழியர்களுக்கு விடுப்பு அளித்த ஆட்சியர்: அதிரடி நடவடிக்கை

சரியான நேரத்திற்கு அலுவலகம் வராத ஊழியர்களுக்கு விடுப்பு அளித்த ஆட்சியர்: அதிரடி நடவடிக்கை
, செவ்வாய், 21 மார்ச் 2023 (18:32 IST)
புதுச்சேரியில்  சரியான நேரத்தில் அலுவலகம் வராத ஊழியர்களுக்கு விடுப்பு அளித்து மாவட்ட ஆட்சியர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
புதுச்சேரியில் அரசு அலுவலங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என பல புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அதிரடியாக அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தார்
 
இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரி நகராட்சி அலுவலகத்திற்கு அவர் ஆய்வு செய்ய வந்தபோது 50 சதவீத ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து சரியான நேரத்திற்கு வராத 24 பேர்களுக்கு விடுப்பு அளித்து உத்தரவு பிறப்பித்தார். 
 
மேலும் இதே போல் தொடர்ந்து சரியான நேரத்திற்கு அலுவலர்கள் வரவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மக்கள் சேவையில் பணியாற்றும் அதிகாரிகள் உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களுக்கு இடம் மாற்றம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு: என்ன காரணம்?