Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடந்தது நிவர்: மீண்டும் துவங்குகிறது பொது போக்குவரத்து!

கடந்தது நிவர்: மீண்டும் துவங்குகிறது பொது போக்குவரத்து!
, வியாழன், 26 நவம்பர் 2020 (11:09 IST)
நிவர் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் நிறுததப்பட்ட பேருந்து சேவை மதியம் 12 மணி முதல் மீண்டும் துவக்கம்.
 
கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவை மக்களை பயமுறுத்தி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணிக்கு முழுவதுமாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்க 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.    
 
தற்போது இந்த புயல் ஆந்திரப்பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தபோதிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், நிவர் புயல் தாக்கம் குறைந்தாலும் தரைப்பகுதியில் தாக்கம் நீடிக்கும் என அறிவித்துள்ளது. இதனால் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். காற்றும் 65 கிமீ - 75 கிமீ வேகத்திலும், சில நேரங்களில் 85 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என தகவல் வெளியானது. 
 
இதனிடையே நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் நேற்று மாலை நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மதியம் 12 மணி முதல் மீண்டும் பேருந்து சேவை தொடங்கும் எனவும் அறிவிப்பு. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

92,66,705 ஆக உயர்ந்தது இந்திய கொரோனா பாதிப்பு!!