Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (11:31 IST)
கோவையில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 

 
கோயம்புத்தூரில் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பொன்தாரணி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியின் பெற்றோர் அப்பள்ளி ஆசிரியர் அளித்த தொல்லையால் தன் மகள் இறந்திருப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். 
 
இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்துள்ளனர். மேலும் தற்கொலைக்கு முன் மாணவி எழுதி வைத்த தற்கொலை கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் கோவையில் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி முதல்வரையும் கைது செய்ய வேண்டும் என கோரி மாணவியின் பெற்றோர், உறவினர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments