Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரினாவில் கூடிய கூட்டம்: விரட்டியடிக்கப்பட்ட துயரம்!

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (12:08 IST)
நிவர் புயலுக்குப் பிறகு  மெரினா கடற்கரையை பார்க்க வந்தவர்கள் விரட்டியடிப்பு. 
 
கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவை மக்களை பயமுறுத்தி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணிக்கு முழுவதுமாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்க 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.     
 
தற்போது இந்த புயல் ஆந்திரப்பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தபோதிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இந்நிலையில் நேற்று மெரினா கடற்கரையை கடல் நீரும், மழை நீரும் ஒன்று சேர சூழ்ந்தது. புயல் நீரால் மெரினா கடற்கரை மூழ்கியுள்ளதை கண்டு மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். ஆனால் இப்போது நீர் வற்றியுள்ளதால் கடற்கரை கொஞ்சம் தெரிந்துள்ளது. 
 
ஏற்கனவே ஊரடங்கு காரணமகா மெரினாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கடல் சீற்றத்துடன் இருப்பதாலும் மெரினா கடற்கரையை பார்க்க வந்தவர்கள் விரட்டியடிக்கபப்ட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments