Webdunia - Bharat's app for daily news and videos

Install App

PSBB பள்ளியின் மேலும் ஒரு ஆசிரியர் கைது: இம்முறை சிக்கியவர் கராத்தே மாஸ்டர்!

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (16:55 IST)
பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகள் கொடுத்த புகார் காரணமாக ஏற்கனவே ராஜகோபாலன் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அதே பள்ளியை சேர்ந்த மேலும் ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சற்று முன்னர் அந்த பள்ளியின் இன்னொரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சென்னை அண்ணாநகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
 
இதனை அடுத்து கராத்தே மாஸ்டர் கெவின் ராஜை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அண்ணாநகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் கைது செய்யப்பட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டரை கடத்தி 6 கோடி கேட்ட கடத்தல்காரர்கள்.. கைக்காசு 300 ரூபாய் செலவானது தான் மிச்சம்.!

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்