Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல இயக்குனர் மகனை 9 வருடத்திற்கு முன்னரே கொன்ற PSBB பள்ளி - திடுக்கிடும் தகவல்!

பிரபல இயக்குனர் மகனை 9 வருடத்திற்கு முன்னரே கொன்ற PSBB பள்ளி - திடுக்கிடும் தகவல்!
, வியாழன், 27 மே 2021 (13:11 IST)
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்த நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்துவந்த இயக்குனரும் நடிகருமான மனோகரின் மகனை 9 வருடத்திற்கு முன்னரே அந்த பள்ளி கொன்றுவிட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் மனோகர் மாசிலாமணி’, “வேலூர் மாவட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் மிருதன், கைதி, டெட்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் PSBB பள்ளியில் படித்துவந்த தனது மகன் கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி காலை பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
webdunia

அதற்கு PSBB பள்ளி தரப்பில் இருந்து பயிற்சியாளர் டீ குடிக்க சென்றபோது மாணவன் இறந்துவிட்டதாக கேர்லசான காரணத்தை கூறியதாக மனோகர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் போது ஜெயலலிதா இந்த விவகாரத்தில் தலையிட்டு பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றியதாக விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மா ஆனந்தமயி… ரஞ்சிதாவை சீடர்கள் இப்படிதான் அழைக்க வேண்டுமாம்!