Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி பிறந்தநாள் கொண்டாட்டத்தை எதிர்த்து ஆர்பாட்டம் – எங்கு தெரியுமா?

மோடி பிறந்தநாள் கொண்டாட்டத்தை எதிர்த்து ஆர்பாட்டம் – எங்கு தெரியுமா?
, சனி, 17 செப்டம்பர் 2022 (12:08 IST)
பொள்ளாச்சியில் பிரதமர் மோடி பிறந்தநாளுக்கு கடைவீதி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடை அடைப்பு செய்து சாலைமறியல்.


பொள்ளாச்சி நகர்புற பகுதியில் உள்ள கடைவீதியில் 5000 மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன, இப்பகுதியில் ஆட்டோ ஸ்டோண்ட் உள்ளது, பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு  பாரதிய கோவை மாவட்டம் ஆட்டோ தொழிலாளர் சங்கம் BMS நிர்வாகிகள் பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு அனுமதியின்றி பேனர் வைத்ததால் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தீபசுஜிதா தலைமையில்  கிழக்கு காவல்நிலையா ஆய்வாளர் ஆனந்தகுமார் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், நிர்வாகிகள் பேனர் அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸ் ஸார் அகற்றினர், இருதரப்பினர் பேச்சுவார்த்தை சுமூகம் ஏற்பட்டதின்பேரில் கடைகள் திறக்கப்பட்டனர், இச்சம்பவத்தால் ஒரு மணி நேரத்து மேல் போக்குவரத்து பாதிக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது.

இன்று ஒரே நாளில் தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இருவருக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் பெரியார், மோடி பிறந்த நாள்: இருவருக்கும் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!