Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி, ஜி ஜின்பிங் வருகையால் கோவளத்தில் பாதுகாப்பு தீவிரம் !

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (15:12 IST)
மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியா-சீனா இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவிவரும் நிலையில், சீனாவிலுள்ள உகான் நகரில் முதல் முறைசாரா உச்சி மாநாடு கடந்த ஆண்டு ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் இந்திய பிரதமர் மோடியும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொண்டனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு வரும் அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள சீன பிரதமர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11 ஆம் தேதி வருகிறார். அப்போது மோடியும் ஜி ஜின் பிங்கும் மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களை பார்வையிடுகின்றனர்.

இதற்காக கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவளம் பகுதியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு சம்மந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மேற்பார்வையிட்டுள்ளார். சாலைகளைச் சீரமைப்பது, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது ஆகிய பணிகளும் மேற்கொள்ள பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments