Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உங்க குழந்தைகளுக்கு நாங்க பொறுப்பில்ல..! – பெற்றோரியம் கையெழுத்து பெறும் பள்ளிகள்!

உங்க குழந்தைகளுக்கு நாங்க பொறுப்பில்ல..! – பெற்றோரியம் கையெழுத்து பெறும் பள்ளிகள்!
, செவ்வாய், 26 ஜூலை 2022 (09:11 IST)
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து பல தனியார் பள்ளிகள் “பொறுப்பு துறப்பு” படிவத்தில் கையெழுத்து கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்த போராட்டம் மற்றும் கலவரங்களில் பள்ளி சூறையாடப்பட்டது. அதை தொடர்ந்து பல தனியார் பள்ளிகள் “தங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல” என்ற சான்றில் பெற்றோரிடம் கையெழுத்து பெறுவதாக புகார் எழுந்துள்ளது.

சில தனியார் பள்ளிகள் அந்த சான்றில் கையெழுத்திடாவிட்டால் மாணவர்களின் டி.சியை பெற்று செல்லுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக அரசு யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தடை! – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!