Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை கட்டணம்: மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (12:33 IST)
தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த, ரூ.4,500 கட்டணத்துக்கும் அதிகமாக ரூ. 6,000 முதல் ரூ. 8,000 வரை வசூலிக்கப்படுவதாகவும், சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கக் கோரிய மனு சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கு உள்ளதால் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் 50% படுக்கைகளும் ஒதுக்க கோரிய ஜவாஹிருல்லாவின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு ரூ.4500 வரை வசூலிக்க ஏற்கனவே ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தி இருந்த நிலையில் தற்போது ரூ.3000 கட்டணம் நிர்ணயிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் குறித்து இன்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments