Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (08:51 IST)
அரசு பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம்" என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அதிரடி அறிவிப்பு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
 
அரசு பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கும் அதே நேரத்தில் பாட வேளை, தேர்வு காலம் ஆகியவை பாதிக்காத வகையில் தன்னார்வலர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விளையாட்டு, திறன் மேம்பாடு, கற்றலை மேம்படுத்தும் பணிகளில் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இதற்கான அனுமதியை அந்தந்த பள்ளி முதல்வர்களே தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்றும், பாடவேளை, தேர்வுக்காலம், பாதிக்காத வகையில் தன்னார்வலர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதை பள்ளி முதல்வர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
மேலும் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமிக்க தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் உபரியாக உள்ள ஆசிரியர்களை கொண்டு காலியிடங்களை நிரப்ப அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதால் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏதும் ஏற்படகூடாது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments