Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழருக்கு சிறைச்சாலை கோவில் போன்றது - மன்சூர் அலிகான்

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (08:51 IST)
புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியினருக்கு சிறைச்சாலை கோவில் போன்றது என தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட பலர் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களை தடுக்க வந்த போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் போலீசாரையும் தாக்கினர். அப்போது, பாராதிராஜா, சீமான் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு, அதன் பின் விடுதலை செய்யப்பட்டனர்.
 
ஆனால், அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் விடுவிக்கப்படாமல் இருந்தார். போலீசாரை தரக்குறைவாக விமர்சித்ததால் அவரோடு, சிலரை சிறையில் அடைத்துவிட்டனர். அவரை விடுதலை செய்யக்கோரி சீமான், சிம்பு உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த இரண்டு வாரமாக புழல் சிறையில் இருந்த மன்சூர் அலிகான் திருத்தணியில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையில் செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமின் வழங்கியது. 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சியினருக்கு சிறைச்சாலை கோவில் போன்றது எனவும், அறவழியில் போராடிய நான் ஏன் திருத்தணியில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திடவேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments