Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்வழி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை : சட்டதிருத்த மசோதா தாக்கல் !

தமிழ்வழி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை : சட்டதிருத்த மசோதா தாக்கல் !
, திங்கள், 16 மார்ச் 2020 (15:38 IST)
தமிழ்வழி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை : சட்டதிருத்த மசோதா தாக்கல் !

தமிழ் வழி பயின்றவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்தார்.
 
அதில், எஸ்.எஸ்.எல்.சி கல்வித் தகுதியாக  உள்ள பணிகளுக்கு 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதியாக உள்ள பணியிடங்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வியை தகுதியாக நிர்ணயித்திருக்கும் படிப்புகளுக்கு தமிழிலேயே படித்திருக்க வேண்டும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், பட்டப்படிப்பு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கும், 10, முதல் 12 ஆம் வகுப்பு பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழில் படித்திருக்க வேண்டும் என்று சட்டத்திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்மூலம், தமிழ்வழியில் பயின்றவர்கள் அரசுப் பணியிடங்களில் வாய்ப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலவச பிரியாணி, பக்கோடா விநியோகம் ...அலைமோதிய மக்கள் கூட்டம் !