Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களைக் குற்றவாளிப் போல நடத்துகிறார்கள் – அச்சக சங்கத்தினர் ஆதங்கம் !

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (13:26 IST)
சுபஸ்ரீ விவகாரத்தில் சர்ச்சையானதை அடுத்து அச்சக சங்கத்தினர் இன்னல்களை அனுபவிப்பதாக அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த விஷயம் சர்ச்சையானதை அடுத்து லாரி டிரைவர் மற்றும் அச்சகக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பேனர் வைத்தவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இது சம்மந்தமாக தமிழ்நாடு டிஜிட்டல் பேனர் அச்சக சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் கிண்டியில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் ‘எங்கள் வேலை பிரிண்டிங் செய்வது மட்டும்தான். அதைக் கட்டுவது எங்கள் வேலை அல்ல. அதைக் கட்டுபவர்கள் செய்யும் தவறினால்  எங்களுடைய ஒட்டுமொத்த தொழிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் காவல்துறை அதிகாரிகள் எங்களைக் குற்றவாளிகள் போல நடத்துகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைப்பதும் எங்களால் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்