Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

Prasanth Karthick
ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (13:33 IST)

இன்று பாம்பன் பாலத்தை திறந்து வைக்க தமிழகம் வரும் பிரதமர் மோடி விமானம் வழியாக ராமர் பாலத்தை கண்டு களித்தார்.

 

தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் பழுதடைந்த நிலையில் தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இன்று ராமநாவமியில் பிரதமர் மோடி பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார். இதற்காக இலங்கையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தடைந்தார். 

 

விமானத்தில் வரும்போது ராமர் பாலத்தை கண்டதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி “சிறிது நேரத்திற்கு முன்பு இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. மேலும், தெய்வீக தற்செயலாக, அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் அது நடந்தது. இருவரின் தரிசனத்தையும் பெற்ற பாக்கியம். பிரபு ஸ்ரீ ராமர் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி. அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்யும் சிங்கள படை.. இன்று 7 பேர் கைது..!

ஐசிஐசிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் இனி ரூ.50,000.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments