Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

Mahendran
செவ்வாய், 27 மே 2025 (18:07 IST)
தமிழகத்தில் காலியாக இருக்கும் ஆறு ராஜ்யசபா தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து திமுகவுக்கு 4 எம்பிக்களும், அதிமுகவுக்கு இரண்டு எம்பிக்களும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
 
இந்த நிலையில், திமுகவின் நான்கு எம்பிக்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் உள்ள இரண்டு எம்பிக்களில் ஒரு எம்பி தொகுதியை தேமுதிக கேட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, ஒரு ராஜ்ய சபா எம்பி சீட் தருவதாக அதிமுக தங்களுக்கு வாக்குறுதி அளித்தது என பிரேமலதா கூறியிருக்கிறார். ஆனால், அப்படி எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என அதிமுக தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை பிரேமலதா சந்தித்தபோது, "ராஜ்யசபா தொகுதி உங்களுக்கு கிடைக்குமா?" என்ற கேள்விக்கு, “பொறுமை கடலினும் பெரிது. தற்போது தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக விரைவில் அறிவிப்போம்,” என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments