Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா அளவுக்கு எடப்பாடியார் இல்ல.. கறார் பேர்வழி! – பிரேமலதா தாக்கு!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (14:38 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக பேசி வந்த நிலையில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகி அமமுகவுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளது. அமமுகவில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் விருதாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்கள் பேட்டியில் அதிமுக கூட்டணி முறிவு குறித்து பேசிய அவர் “ஜெயலலிதா கூட்டணி கட்சியினரை நடத்துவது போல எடப்பாடி பழனிசாமி நடத்தவில்லை, அனைத்து கட்சிகளையும் அழைத்து கூட்டணி பேசிவிட்டு இறுதியில்தான் எங்களை அழைத்தார்கள். 13 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என சொன்னார்கள். 18 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டோம். ஆனால் இவ்வளவுதான் முடியும் அதற்கு மேல் உங்கள் விருப்பம்போல செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள், அதனால்தான் கூட்டணி விட்டு வெளியேறினோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேபாளத்தை உலுக்கி வெள்ளம், நிலச்சரிவு! 112 பேர் பலி!

“உழைத்தவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை” - ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா? - இபிஎஸ் கேள்வி.!!

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments