Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனித்து போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி! – முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

Advertiesment
Tamilnadu
, திங்கள், 15 மார்ச் 2021 (12:13 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பெரும்பாலும் கூட்டணிகளை முடிவு செய்து அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணிக்கு பேசிவந்த கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி கூட்டணியிலிருந்து விலகியுள்ளதுடன் தனித்து போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள கிருஷ்ணசாமி முதற்கட்டமாக 50 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட உள்ளார், அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது மறுநாள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிக்கை வேணும்னா விடலாம்.. முடிவெடுக்க முடியாது! – அதிமுகவுக்கு குட்டு வைத்த பாஜக!