பத்திரிக்கை சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 140வது இடம்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (13:33 IST)
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய ஆய்வில் இந்தியா 140வது இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் பேணப்படும் நாடுகள் குறித்த ஆய்வில் இந்தியா 140வது இடத்தில் உள்ள நிலையில் இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கண்காணிப்பு பிரிவு சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் மூத்த பத்திரிக்கையாளர் சாய்நாத் உட்பட பலர் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் பேசிய சாய்நாத் “பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கிய புள்ளியே கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம்தான். சமக்காலத்தில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து எழுதும் பத்திரிக்கையாளர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் இணைய வசதி துண்டித்தல், பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுத்தல் உள்ளிட்ட தடைகள் நீக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments