Publish Date: Tue, 06 Apr 2021 (08:10 IST)
Updated Date: Tue, 06 Apr 2021 (08:39 IST)
தேமுதிக பொருளாளரும் இப்போது கட்சியை வழிநடத்துபவருமான பிரேமலதா விஜயகாந்த் சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தேமுதிகவில் விஜயகாந்த் குடும்பத்தில் இருந்து இந்த முறை தேர்தலில் போட்டியிடும் ஒரே நபராக பிரேமலதா விஜயகாந்த் இருக்கிறார். அவர் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில் அவர் தனது வாக்கைப் பதிவு செய்தார்.