Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரவத்திற்கு ஆம்புலன்ஸில் சென்ற பெண்... டயர் வெடித்து பலி!

பிரவத்திற்கு ஆம்புலன்ஸில் சென்ற பெண்... டயர் வெடித்து பலி!
, வியாழன், 10 ஜூன் 2021 (14:32 IST)
கள்ளக்குறிச்சி அருகே அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழப்பு. 

 
கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி ஜெயலட்சுமி (வயது 23) கர்ப்பிணி பெண் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அருகிலுள்ள புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்ததியுள்ளனர்.
 
இவரது மாமியார் செல்வி, இவரது உறவினர் அம்பிகா ஆகிய ஆகிய 3 பேரும் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது கள்ளகுறிச்சி அருகே உள்ள ஆலத்தூரில்  108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் டயர் வெடித்து சாலையோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கர்ப்பிணிப் பெண்ணான ஜெயலட்சுமி அவரது மாமியார் செல்வி உறவினர் அம்பிகா மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
மேலும் படுகாயமடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கலியமூர்த்தி,  புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீனா, ஆம்புலன்ஸ் உதவியாளர் தேன்மொழி ஆகிய மூவரும் படுகாயம்  அடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அரசு செவிலியர் மீனா கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நடந்த இந்த கோர விபத்து கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி தாடியை ஷேவ் செய்ய 100 ரூபாய் அனுப்பிய நபர்!