Publish Date: Thu, 11 Apr 2019 (10:54 IST)
Updated Date: Thu, 11 Apr 2019 (10:56 IST)
சூப்பர் ஸ்டார் கிட்டயும் என்கிட்டயும் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார்.
இந்திய குடியரசு கட்சியின் மாநில துணைத்தலைவராக இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன், பல கட்சியிலிருந்து தாவி தாவி வந்து இந்த கட்சிக்கு வந்துள்ளார். தனக்கு இந்த கட்சியின் கொள்கை பிடித்திருப்பதால் தொடர்ந்து கட்சிகள் இருப்பதாக கூறியுள்ளார். அக்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் பவர் ஸ்டார் போட்டியிடுகிறார்.
தமிழக மக்களிடம் சூப்பர் ஸ்டாருக்கும், பவர்ஸ்டார்ருக்கும் நல்ல வரவேற்பும், ஆதரவும் உள்ளது. கண்டிப்பாக அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என அவர் கூறினார்.