Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புது அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்

Advertiesment
புது அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்
, செவ்வாய், 12 ஜூலை 2016 (15:34 IST)
மேட்டூர் புது அனல்மின் நிலையத்தில், ஒரு மாதத்துக்கு பின், நேற்று மின் உற்பத்தி துவங்கியது.


 


மேட்டூர், 840 மெகாவாட் அனல்மின் நிலைய வளாகத்தின் ஒரு பகுதியில், 600 மெகாவாட் புது அனல்மின் நிலையம் உள்ளது. பராமரிப்பு பணிக்காக, கடந்த மாதம், 10ம் தேதி புது அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. 
 
பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பின், நேற்று முன்தினம் இரவு, மின் உற்பத்திக்காக ஆயத்த பணிகள் துவங்கின. நேற்று காலை, 100 மெகாவாட்டில் துவங்கிய மின் உற்பத்தி, படிப்படியாக அதிகரித்தது. மாலை, 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இன்று, புது அனல்மின் நிலையம் இலக்கான, 600 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதி பரபரப்பு அடங்கும் முன்னர் மேலும் ஒரு கொடூரக்கொலை