Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புரெவி எதிரொலி: தமிழகத்தில் மின் தடை!

Advertiesment
Burevi Cyclone
, வியாழன், 3 டிசம்பர் 2020 (15:43 IST)
தமிழகத்தில் புரெவி புயல் கரையை கடக்கும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருமாறியுள்ள நிலையில் இலங்கையின் திரிகோண மலையை கடந்து மன்னார் வளைகுடா வழியாக பாம்பன் அருகே நெருங்கி கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வரும் நிலையில் கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
 
நாளை காலைக்குள் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் தமிழகத்தில் புரெவி புயல் கரையை கடக்கும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டு பின்னர் ஆய்வு செய்து வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரதம் – முருகனின் உடல்நிலைக் கவலைக்கிடம்!