Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளிநாடு தப்பிச்செல்ல சிவசங்கர் பாபா திட்டமா? லுக்-அவுட் நோட்டீஸ் தர சிபிசிஐடி முடிவு!

வெளிநாடு தப்பிச்செல்ல சிவசங்கர் பாபா திட்டமா? லுக்-அவுட் நோட்டீஸ் தர சிபிசிஐடி முடிவு!
, செவ்வாய், 15 ஜூன் 2021 (07:59 IST)
சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா என்பவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அவர் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பி செல்ல முடியாத வகையில் லூகவுட் நோட்டீஸ் வழங்க சிபிசிஐட் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி தனிப்படை குழுவினர் விரைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
அங்கு அவருடன் விசாரணை செய்துவிட்டு பின்னர் அவரை கைது செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அவரை கைது செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்று ஒரே நாளில் மதுவிற்பனை இத்தனை கோடியா?