Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டு பிரச்சினையை சாதி பிரச்சினையாக சித்தரிப்பு? - கோபி, சுதாகர் மீது கமிஷனரிடம் புகார்!

Prasanth K
வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (14:53 IST)

பிரபல யூட்யூபர்களான கோபி, சுதாகர் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்தில் திருநெல்வேலியில் கவின் என்ற ஐடி இளைஞர் தனது சகோதரியை காதலித்து வந்ததால், சுர்ஜித் என்ற இளைஞர் அவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சுர்ஜித் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூட்யூபர்களான கோபி, சுதாகர் தங்களது பரிதாபங்கள் சேனலில் சொசைட்டி பரிதாபங்கள் என்ற வீடியோவை வெளியிட்டனர். அதில் சாதிய ரீதியாக நடக்கும் தற்கால சம்பவங்களை அவர்கள் கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர்.

 

தற்போது கோபி, சுதாகர் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் புகார் அளித்துள்ளார். அதில் நெல்லையில் இரு குடும்பங்கள் இடையே ஏற்பட மோதலை இரு சமூகத்தின் மோதலாக கோபி, சுதாகர் சித்தரிப்பதுடன், சமூகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். 

 

கோபி, சுதாகரின் சொசைட்டி பரிதாபங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வரும் நிலையில் இந்த புகார் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னா பெயர்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments