Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் கட்சியில் இருந்து விலகிய மேலும் ஒரு பிரபலம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (08:58 IST)
தமிழகத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முதலாக போட்டியிட்டது. இந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றாலும் ஓரளவுக்கு தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கமல்ஹாசன் உள்பட அக்கட்சியின் ஒருசிலர் எம்எல்ஏவாக சட்டமன்றத்தில் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் உள்பட கமல் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தது மட்டுமின்றி பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது சோகமான நிகழ்வாக இருந்தது 
 
இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் கமல் கட்சியில் இருந்து பல பிரமுகர்கள் அடுத்தடுத்து விலகிய நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலம் விலகியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிட செயலாளராக இருந்த பூவை ஜெகதீஷ் என்பவர் தற்போது அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஜாதி பாகுபாடு அதிகம் இருப்பதாகவும் அதனால் அக்கட்சியிலிருந்து தான் விலகுவதாகவும் அவர் பேட்டி அளித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை வாகன ஓட்டிகளே..! இனி 5 வித விதிமீறல்களுக்கு அபராதம்! - போக்குவரத்து காவல்துறை உத்தரவு!

மே மாதத்திலேயே வேகமாக நிறையும் மேட்டூர் அணை!? காவிரியில் 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! இந்த ஆண்டு செம மழை! - வானிலை ஆய்வு மையம்!

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments