Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூந்தமல்லி துணிக்கடையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா! - சென்னையில் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (11:39 IST)
சென்னை பூந்தமல்லியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரியும் 50 ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 70 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. சமீப காலமாக முழு முடக்கம், கடுமையான கட்டுபாடுகள் முதலானவற்றை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்ததன் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக தெரிய வந்துள்ளது. சுமார் 100 ஊழியர்கள் பணிபுரியும் அந்த துணிக்கடையில் உள்ள 60 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 50 பேருக்கு கொரோன உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், துணிக்கடையும் அதிகாரிகள் மூடியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments