Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேனரை தள்ளிவிட்ட காத்து மேல கேசு போடனும்: பொன்னையா சூப்பர்யா...

Webdunia
சனி, 5 அக்டோபர் 2019 (12:07 IST)
சுபஸ்ரீ மரணத்தில் பேனரை தள்ளிவிட்ட காத்து மீதுதான் கேஸ் போட வேண்டும் என பொன்னையன் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது அதிமுக கட்சி பிரமுகரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் தங்களுடைய ரசிகர்கள் யாரும் தங்களுக்கு பேனர் வைக்ககூடாது என வலியுறுத்தினர்.
 
மேலும் எதிர்கட்சியினர் இதனை வன்மையாக கண்டித்தும் வந்தனர். இதனிடையே பிரேமலதா விஜயகாந்த், சுபஸ்ரீ உயிரிழப்பு எதிர்பாராத நிகழ்வு, சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும் லாரி வந்ததும் விதியே என கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இப்போது பொன்னையன் கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், காத்து அடித்து பேனர் கீழே விழுந்தது. பேனர் வைத்தவரா பேனை தள்ளி சுபஸ்ரீயை கொன்றது? அப்படி கேஸ் போட வேண்டும் என்றால் காற்றின் மீதுதான் போட வேண்டும் என பேசியுள்ளார். 
 
இது குறித்து வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை கண்ட பலர் அவர் திட்டியும் வருகின்றனர். இதோ அந்த வீடியோ... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments