Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி தொகுதி யாருக்கு? திமுக கூட்டணியில் சலசலப்பு

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (08:41 IST)
திமுக கூட்டணியில் ஒருவழியாக தொகுதி பங்கீடு முடிந்து அடுத்தகட்டமாக எந்தெந்த கட்சிக்கு என்னென்ன தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை இன்றுமுதல் நடைபெறவுள்ளது. இன்று காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒன்பது தொகுதிகளின் விபரம் தெரிய வரும் என தெரிகிறது
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியை பெற்ற பாரிவேந்தரின் ஐஜேக, கள்ளக்குறிச்சி தொகுதி மீது கண் வைத்துள்ளதாம். ஆனால் இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது மகனை போட்டியிட வைக்க கடந்த சில மாதங்களாக களப்பணி செய்து வருகிறார். தற்போது இந்த தொகுதியை பாரிவேந்தர் கேட்பதால் அதிர்ச்சி அடைந்த பொன்முடி, இந்த தொகுதியை தலைவரிடம் கேட்டு பெற தீவிர முயற்சியில் இருக்கின்றாராம். 
 
துர்கா ஸ்டாலின், உதயநிதி உள்பட பலரிடம் இதுகுறித்து பொன்முடி தரப்பினர் பேசி வருவதாகவும், உதயநிதி எப்படியும் கள்ளக்குறிச்சி உங்களுக்குத்தான் என நம்பிக்கையான வார்த்தைகள் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பொன்முடிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி கிடைக்காமல் செய்ய திமுகவினர்களே சிலர் உள்குத்து வேலை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக தலைவர் என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments