Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசு தொகுப்பு.. டோக்கன் விநியோகம் இன்று தொடக்கம்!

Prasanth Karthick
வெள்ளி, 3 ஜனவரி 2025 (09:46 IST)

தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.

 

 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை-1 ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் சில பொருட்களும் சேர்த்து வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.249 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகுப்புடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படுகின்றன.

 

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 9ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில் மக்கள் ரேசன் கடைகளில் கூடி கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக டோக்கன் விநியோகிக்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. எந்த தேதியில் எந்த நேரத்தில் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

 

இன்று ரேசன் பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments