Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”சுர்ஜித்திற்காக பிரார்த்திப்போம்”. பொன்னார் டிவிட்

”சுர்ஜித்திற்காக பிரார்த்திப்போம்”. பொன்னார் டிவிட்

Arun Prasath

, சனி, 26 அக்டோபர் 2019 (14:16 IST)
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப் பட பிரார்த்திப்போம் என பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நேற்று மாலை 5.40 மணி அளவில், திருச்சி நடுகாட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் இரண்டு வயது சிறுவனான சுர்ஜித் தவறி விழுந்தத்தை தொடர்ந்து 17 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது.

கிட்டதட்ட 129 அடி ஆளமுள்ள கிணற்றில் குழந்தை 70 அடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டையை சேர்ந்த வீரமணி குழு மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சற்றுமுன் பேரிடர் மீட்பு குழு விரைந்து வரவுள்ளதாக தகவல் வெளியானது. அனைத்து மக்களும் பேரிடர் மீட்பு குழுவினரை நம்பிக்கையுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். முன்னதாக 5 குழுக்களால் முயன்றும் குழந்தையை மீட்க முடியவில்லை. தற்போது 6 ஆவது குழு முயன்று வருகிறது.

முன்னதாக சுஜித்தின் மேல் மண் மூடியிருந்த நிலையில் தற்போது மண்ணை அகற்றி ஒரு கருவியால் குழந்தையை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் குழந்தை அசைவின்றி உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து பாஜவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில், லட்சக்கணக்கான மக்களின் பிரார்த்தனையின் பலனாகவும், பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களின் முயற்சியால் குழந்தை பத்திரமாக மீட்க்கப்பட வேண்டும்,  அதற்காக பிரார்த்திப்போம்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தை சுர்ஜித்தை ஒன்றரை மணி நேரத்தில் மீட்க முடியும் ! மீட்புப் படையினர் நம்பிக்கை