Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”முரசொலி நிலத்தை திரும்ப கொடுங்கள்.. 5 கோடி தருகிறோம்” ஸ்டாலினுக்கு சவால் விடும் பொன்னார்

”முரசொலி நிலத்தை திரும்ப கொடுங்கள்.. 5 கோடி தருகிறோம்” ஸ்டாலினுக்கு சவால் விடும் பொன்னார்

Arun Prasath

, திங்கள், 18 நவம்பர் 2019 (12:37 IST)
பஞ்சமி நிலம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிற முரசொலி நிலத்தை ஸ்டாலின் திரும்ப கொடுத்தால், அவருக்கு 5 கோடி தர பாஜக தயாராக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.

சமீபத்தில் அசுரன் திரைப்படம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், “பஞ்சமி நில மீட்பை பேசும் அசுரன் திரைப்படம் படல் அல்ல, பாடம்” என பகிர்ந்தார். ஸ்டாலினின் டிவிட்டை குறிப்பிட்டு, பாமக தலைவர் ராமதாஸ், “அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று முரசொலி அலுவலகத்திற்காக வலைக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஸ்டாலின், முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என அந்த நிலத்திற்குரிய பட்டாவை காட்டினார்.
webdunia

இந்நிலையில் நேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்” திமுக அறைக்கட்டளைக்கு சொந்தமான நிலம் பஞ்சமி நிலம் என கூறப்படுகிறது. அந்த நிலம் பஞ்சமி நிலமாக இருந்தால் ஸ்டாலின அந்த நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என கூறினார்.

மேலும், “முரசொலி நிலம் 5 கோடி மதிப்பு என கூறப்படுகிறது. ஸ்டாலின் அந்த நிலத்தை அரசுக்கு கொடுக்கும் பட்சத்தில் திமுகவிற்கு 5 கோரி இழப்பு என்றால், அந்த 5 கோடியை பாஜக தர தயாராகவுள்ளது” என பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமாவளவனை செருப்பால அடிக்கனும்: பொங்கி எழுந்த காயத்ரி ரகுராம்!