Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வழிச்சாலையை மக்கள் விரும்புகிறார்கள் – பொன்னார் விளக்கம் !

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (15:53 IST)
நேற்று தமிழகம் வந்த நிதின் கட்கரி 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் எனப் பேசியதை அடுத்து மீண்டும் சர்ச்சைகள் எழ ஆரம்பித்துள்ளன.

நேற்று பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேலத்தில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி , ராமதாஸ் முன்னிலையில் பேசிய அவர். 8 வழிச்சாலை திட்டத்தை விவசாயிகளின் தேவையை நிறைவேற்றிய பின்னர் செயல்படுத்துவோம் என்றும், நிலம் கையகப்படுத்துவதற்கு நாங்கள் வழக்கத்தை விட தொகையை ஒப்பீட்டளவில் அதிகளவில் உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் மீண்டும் 8 வழிச்சாலை பற்றிய சர்ச்சைகள் எழ ஆரம்பித்தன.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ’ மக்கள் 8 வழிச்சாலை திட்டத்தை விரும்புகிறார்கள். ஆனால் ஒரு சிலரின் தூண்டுதலின் பேராலேயே வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அதைதான் நிதின் கட்கரி கூறினார்’ என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments