Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னருக்கு வந்த சோதனை... துப்பட்டியோடு விட்ட போலீஸார்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:40 IST)
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் காவல் நிலையத்தில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
 
ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒருவரை தாக்கியது தொடர்பாக போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன், நெல்லை சந்திப்புப் பகுதியில் உள்ள பாரதியார் சிலையின் அடியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 
 
பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நள்ளிரவு வரையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் அவர்களைக் கைது செய்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் அங்கேயே தங்க வைத்திருந்தனர். 
 
அப்போது காவல் நிலையத்திலேயே வெறும் தரையில் ஒரு போர்வையை மட்டும் வைத்துப் படுத்து உறங்கினார். தற்போது நள்ளிரவில் அவர் காவல் நிலையத்தில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments