Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வருத்தப் படாத வாலிபர் சங்கம் 2 வரும்… ஆனா சிவகார்த்திகேயன் இருக்கமாட்டார் – இயக்குனர் பொன்ராம்!

வருத்தப் படாத வாலிபர் சங்கம் 2 வரும்… ஆனா சிவகார்த்திகேயன் இருக்கமாட்டார் – இயக்குனர் பொன்ராம்!
, வியாழன், 7 அக்டோபர் 2021 (21:33 IST)
தான் நடித்த வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் சந்தை மதிப்பை நிலைநாட்டிய படங்களில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்துக்கு முதன்மையான இடம் உண்டு. அதன் பின்னர் அவரை வைத்து ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கினார். இப்போது எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் தனது முதல் படமான  ஹரிகுமார் நடித்த திருத்தம் என்ற படத்தில் நிகழ்ந்த தவறு பற்றி கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்கானலில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு ‘அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவே கூடாது. ஏனென்றால் அது ஒரு எபிக் படம். எங்களுக்கே தெரியாமல் நாங்கள் ஜாலியாக எடுத்த படம். அதை திரும்ப எடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் பொன்ராம் பார்ட்2 வரும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பார்ட் 2 வருவது உறுதி, சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி (maturity) ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம். போட்றா வெடிய’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லட்சணமான அழகில் டிடி - லைக்ஸ் அள்ளும் போட்டோஸ்!