Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை எண்ணூரில் வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை எண்ணூரில்  வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தம்:  மாசு கட்டுப்பாட்டு வாரியம்
, புதன், 27 டிசம்பர் 2023 (17:20 IST)
சென்னை எண்ணூரில் இன்று அதிகாலை திடீரென அமோனியா வாயு கசிந்த நிலையில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இதனை அடுத்து அமோனியா கசிவு ஏற்பட காரணமாக இருந்த தொழிற்சாலை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது சென்னை எண்ணூரில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் எனவே அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து உடனடியாக ஆய்வு குழு மதிப்பீட்டு அறிக்கையை 24 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக மக்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது- சசிகலா