Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கசிந்தது அமோனியா வாயு தான்: உறுதி செய்தது மாசு கட்டுப்பாடு வாரியம்!

கசிந்தது அமோனியா வாயு தான்: உறுதி செய்தது மாசு கட்டுப்பாடு வாரியம்!
, புதன், 27 டிசம்பர் 2023 (07:48 IST)
சென்னை எண்ணூர் தொழிற்சாலையிலிருந்து கசிந்தது அமோனியா வாயு தான் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. 
 
சென்னை எண்ணூர் கடல் பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியா எடுத்துவரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் சற்றுமுன் உறுதி செய்துள்ளது. 
 
ஆலை வாசலில் காற்றில் 400 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டிய அமோனியா அளவு தற்போது 2090 மைக்ரோ கிராம் இருப்பதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் கடலில் 5 மில்லிகிராமாக இருக்க வேண்டிய அமோனியா தற்போது 49 மில்லிகிராம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 
 
தமிழ்நாடு கடல் சார்ந்த வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் அமோனியா வாயு கசிந்த கோரமண்டல் தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு உள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக மாநாட்டிற்கு பிறகு கூட்டணி கட்சிகள் நினைப்பது என்ன?