Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..

Arun Prasath
சனி, 18 ஜனவரி 2020 (19:45 IST)
தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், சத்துணவு மையங்களிலும், பள்ளிகளிலும், அங்கன் வாடி உட்பட பல முக்கிய இடங்களிலும் 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

மேலும் புலம்பெயர் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. காலை 7 மணி முதல் 5 மணி வரை சொட்டு மருந்து முகாம்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments