Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்! 56.34 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து! – சுகாதாரத்துறை தகவல்!

Prasanth Karthick
ஞாயிறு, 3 மார்ச் 2024 (20:15 IST)
இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்ட நிலையில் 56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



குழந்தைகளை போலியோ பாதிப்பு ஏற்படாமல் காக்க போலியோ சொட்டு மருந்து வழங்குவது அவசியமானதாக உள்ளது. இன்று தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனை, பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பொது இடங்களில் நடத்தப்பட்ட இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை தமிழகம் முழுவதும் இன்று மொத்தமாக 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 98.18 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments