Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போலீஸ் அதிகாரி மனைவியிடமே சில்மிஷம் செய்த போதை ஆசாமி.. தர்ம அடி விழுந்ததால் பரபரப்பு..!

போலீஸ் அதிகாரி மனைவியிடமே சில்மிஷம் செய்த போதை ஆசாமி.. தர்ம அடி விழுந்ததால் பரபரப்பு..!

Siva

, வியாழன், 15 பிப்ரவரி 2024 (18:18 IST)
காவலர் குடியிருப்பில் போலீஸ் அதிகாரி மனைவியிடமே போதை ஆசாமி ஒருவர் சில்மிஷம் செய்த நிலையில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 
 
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பிரபாகரன் பணி நிமித்தமாக வெளியூர் சென்று இருந்த நிலையில் அவரது மனைவி வீட்டின் முன் செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த போதை ஆசாமி அவரிடம் சில்மிஷம் செய்துள்ளார். 
 
இதனை அடுத்து அந்த பெண் அலறிய நிலையில் அந்த பகுதியில் இருந்த காவலர்கள் உடனடியாக அந்த போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்த நிலையில் அதன் பின் அவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
இதன் பின்னர் அந்த போதை ஆசாமி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரை 27ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரம்பலூர் காவலர் குடியிருப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை..! தேர்தலில் போட்டிடுவது சஸ்பென்ஸ்..!! ஆளுநர் தமிழிசை..!!