Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சைவ ஹோட்டலுக்கு சென்று சிக்கன் ரைஸ் கேட்டு அலப்பறை செய்த போலீஸ் காரர்கள்!

சைவ ஹோட்டலுக்கு சென்று சிக்கன் ரைஸ் கேட்டு அலப்பறை செய்த போலீஸ் காரர்கள்!
, சனி, 18 பிப்ரவரி 2023 (09:54 IST)
சென்னை தாம்பரத்தை அடுத்து உள்ள ஒரு சைவ ஹோட்டலுக்கு சென்ற இரு போலீஸ்காரர்கள் சிக்கன் ரைஸ் கேட்டு பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள பதுவஞ்சேரிக்கு ஆயுதப் படையைச் சேர்ந்த ரவி மற்றும் தமிழ்ச் செல்வம் ஆகிய இரு காவலர்கள் சென்று சிக்கன் ரைஸ் கேட்டுள்ளனர். ஆனால் ஹோட்டல் ஊழியர்கள் இது ‘சைவ ஹோட்டல்’ எனக் கூறியுள்ளனர். ஆனால் போதையில் இருந்த இருவரும் அதைக் கேட்காமல் ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற ஹோட்டல் ஊழியர்களும், போலீஸாரும் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இது சம்மந்தமான சிசிடிவி காட்சிகளை வைத்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்மந்தப்பட்ட போலீஸார்கள் மேல் துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியரசுத்தலைவர் திரௌபதி இன்று தமிழகம் வருகை!