திமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் போலி மது ஆலை.. திருச்செங்கோடு பகுதியில் 5 பேர் கைது

Mahendran
புதன், 3 ஏப்ரல் 2024 (14:59 IST)
திருச்செங்கோடு பகுதியில் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் போலி மது ஆலை இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஐந்து பேருக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்களை அடுத்து போலீசார் அதிரடியாக சோதனை செய்ததில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் தொடர்புடைய சிலர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இது குறித்து காவல்துறையிடம் விசாரணை செய்து வருவதாகவும் முதல் கட்ட விசாரணையில் குடோனை வாடகைக்கு எடுத்து அதில் போலி மதுபானம் தயாரித்து 13 மதுபான கடைகளுக்கு இரவு நேர விற்பனைக்காக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது 
 
மேலும் 5400 லிட்டர் போலி மதுபானம்  பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஒரு இரண்டு சக்கர வாகனம் மற்றும் ஒரு மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி இல்லை.. தவெகவின் மாற்று ஏற்பாடு இதுதான்..

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments